×

இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் மனு

 

விருதுநகர், செப்.13: இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று மனு அளித்தனர். மனுவில், விருதுநகர் நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் வசிக்கும் 19 குடும்பங்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர்.

கூலி வேலை செய்து குறைந்த வருமானத்தில் வாழ்ந்து வரும் இவர்களுக்கு சொந்தமாக வீடு, காலியிடம் எதுவும் இல்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி கடந்த 17.10.2022ல் மனு அளித்தனர். மனுவை விசாரித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மனுக்கள் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டது. மனுஅளித்து ஓராண்டு ஆகியும் எந்த தகவலும், கடிதமும் கிடைக்கவில்லை. பலமுறை அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இலவச வீட்டுமனை பட்டாகோரி மனு அளித்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

The post இலவச வீட்டுமனை பட்டா வேண்டும்: ஜனநாயக மாதர் சங்கம் மனு appeared first on Dinakaran.

Tags : Demokrati Matar Sangam ,Virudhunagar ,All India Democratic Mother Sangh ,Democratic Mother Sangh ,Dinakaran ,
× RELATED நிலக்கடலையில் வேர் அழுகல் நோய்...